வெள்ளச்சி | தெய்வ மனுஷிகள் -20
வெள்ளச்சி வீடு, ஊருக்கு ஒதுக்குப்புறமா இருந்துச்சு. அப்பன் விவசாயி. வெள்ளச்சி ஒரே மக. அந்த ஊரு மக்களுக்கு எந்த நல்லது கெட்டதுன்னாலும் வெள்ளச்சியோட அப்பங்காரன் நிப்பான்.பக்கத்து வீட்டுல வேலாயின்னு ஒரு அம்மை இருந்தா. அவளுக்குக் கல்யாணமாகி ரெண்டு வருஷத்துல புருஷங்காரன் பாம்பு தீண்டிச் செத்துப்போனான். ஒருக்கா ஊர் எல்லையில, பெறந்து அஞ்சாறு நாளான ஆம்புளைப் புள்ளைய யாரோ கொண்டாந்து போட்டுட்டுப் போயிட்டாக. பஞ்சாயத்துக் கூடி, அந்தப் புள்ளைய, வேலாயிக்கிட்டக் குடுத்திரலாம்னு முடிவு செஞ்சாக. `துணைக்குத் துணையா இந்தப் புள்ளையாவது இருக்கட்டுமே’ன்னு வேலாயியும் அந்தப் புள்ளையை வாங்கி ஆசை ஆசையா வளர்த்தா. `தீயான்’னு அவனுக்குப் பேரு...!Credits:Script & Host - V. Neelakandan | Edit : Navin Bala | Music : Santhosh | Producer : Raghuveer | Chief Sound Engineer : Esidor Edberg | Podcast channel Executive: Prabhu Venkat | Podcast Network Head : M Niyas Ahmed